3 மே, 2011

ஒசாமாவை ரகசியமாக சுட்டுக் கொன்றது எப்படி? அமெரிக்க அதிகாரி

ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது பற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றார்கள். ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி விளக்கம் அளிக்கையில்,

பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் ஒசாமா பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு மிக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலை உறுதி செய்த பிறகு பின்லேடனை கொல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரகசிய திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. அவ்வளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதுபற்றி பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுக்கும் தெரிவிக்கப்படவில்லை. ஒசாமாவை கொல்ல 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. ஒசாமாவுடன் 3 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் 40 நிமிடத்தில் முடிந்து விட்டன.

இந்த நடவடிக்கையின்போது ஒரு ஹெலிகாப்டர் இயந்திர கோளாறு ஏற்பட்டு சேதம் அடைந்தது. ஆனால் அமெரிக்க படையினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக