3 மே, 2011

ஒசாமாவை கொல்ல ஏப்ரல் 29ல் ஒபாமா கையெழுத்து








ஒசாமா பின் லேடனை கொலை செய்ய ஏப்ரல் 29 ஆம் திகதியன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் திட்டம் தீட்டி, நேர்த்தியாக அதை வழிநடத்திச் சென்ற அமெரிக்கா, ஏப்ரல் 29 ஆம் திகதியன்று ஒசாமாவை கொல்ல அமெரிக்க இராணுவத்துக்க அனுமதி அளித்துள்ளது. அலபாமாவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி ஒபாமாவுக்கு, பாகிஸ்தானில் இருந்த அமெரிக்க உளவு அதிகாரிகள் ஒசாமாவை நெருங்கிவிட்ட செய்தியை கூறினர். அதனை கேட்ட ஒபாமா, ஒசாமாவை கொன்று விடுமாறு உத்தரவிட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டொம் டானிலன் தான் ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை தயார் செய்து அதனை படை தளபதிகளுக்கு அனுப்பியுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில் ஒசாமாவை தீர்த்துக்கட்டுவது குறித்து உயர் மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடந்துள்ளது.

இராணுவ அகடமிக்கு அருகில் இருந்த ஒசாமா கட்டடம்

ஒசாமா கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் இராணுவ அகடமியில் இருந்து மிக அருகாமையில் (800 யார்) இருக்கிறது. இது குறித்து அடோபாபாத் வாசிகள் கூறுகையில், இந்த இடத்தில் இருக்கும் கட்டடம் கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டடத்திற்குள் குடி வந்தது யார் என்பது மர்மமாகவே இருந்தது. அங்கிருக்கும் யாரும் பொதுமக்களுடன் பழகியதில்லை. அவர்கள் யாரும் அடிக்கடி வெளியில் வந்ததும் இல்லை என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக