3 மே, 2011

யாரும் நுழைய முடியாத வீடு




இஸ்லாமாபாத் அருகே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அப்பட்டா பாத்தில் ஒரு மாடி வீடொன்றிலேயே ஒஸாமா பின் லேடன் தங்கியிருந்துள்ளார் இந்த வீடு எவரும் உள்ளே நுழையாத வகையில் அதிக பாதுகாப்பு அரண்களுடன் அமைக்கப்பட்டிருந்தது.

இங்கு அவர் வெளி தொடர்புக்காக சில நம்பிக்கையான உதவியாளர்களை மட்டும் வைத்திருந்தார். அவர்கள் மூலம் தான் எந்த தகவலும் வெளியே செல்லும் அல்லது ஒசாமாவுக்கு கிடைக்கும் பொதி தபால் மூலம் மட்டுமே இவருக்கு தகவல்கள் வந்தன. அது மூலமே இவரும் தகவல்களை அனுப்பினர். தபால் கொண்டு செல்லப்படுவதை நான்கு ஆண்டுகளாக அமெரிக்க உளவுப் படைகள் கண்காணித்தன. இதன் மூலம் தான், ஒசாமா பதுங்கியிருந்த வீடு தெரிய வந்தது.

இந்த வீடு 2005 இல் கட்டப்பட்டது. அருகில் இருந்த வீடுகளை விட, 8 மடங்கு பெரியது. வீட்டை முதலில் பார்த்த அமெரிக்க படைகளே ஆச்சரியம் அடைந்தன. காரணம் வீட்டைச் சுற்றி 12 அடி உயர சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் நுழைய முடியாத வகையில் இரண்டு அடுக்கு ‘கேட்’ அமைக்கப்பட்டிருந்தது. வீட்டில் தொலைபேசி அல்லது இணைய இணைப்புகள் இல்லை.

குப்பை கூட வெளியே செல்லக்கூடாது என்பதால் அவை வீட்டுக்கு உள்ளேயே எரிக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக