3 மே, 2011

அடிக்கடி இடம் மாறுகையில் அகப்பட்டார் பின்லேடன் ஐரோப்பிய, அரபு நகரங்களில் மகிழ்ச்சி ஆரவாரங்கள்





அல்கைதாவின் தலைவர் ஒஸாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற மேற்குலக ஊடகங்கள் அதைப் பிரதான செய்தியாக வெளியிட்டதுடன் ஐரோப்பிய நகரங்களில் மகிழ்ச்சி ஆராவாரங்களும் இடம்பெற்றன. அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்ட மக்கள் அமெரிக்கா வாழ்க.

ஒபாமா வாழ்க என்ற கோஷங்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அமெரிக்காவின் முக்கிய ஊடகங்கள் வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு ஒஸாமாவின் செய்தியை ஒளி, ஒலிபரப்பிக் கொண்டிருந்தன. உலகின் முக்கியமான பயங்கரவாதத் தலைவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே டொலர், யூரோ நாணயங்களின் பெறுமதிகள் உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் மாத்திரமின்றி, அரபு நாடுகளிலும் ஒஸாமா இறந்த செய்தி கேட்டு ஆரவாரம் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் மாநிலத்தில் ஒஸாமா மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அமெரிக்கா வஸிரிஸ்தானில் இராணுவ நடவடிக்கையை வேகமாக்கியது.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அஷ்பக் கயானியை ஒதுக்கி வைத்த அமெரிக்கா வஸிரிஸ்தான் இராணுவ நடவடிக்கைக்கென நேட்டோ இராணுவ அதிகாரியை தளபதியாக்கியது. இதன் பின்னர் விமான, தரைமார்க்க நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டன.

இதனால் அடிக்கடி ஒஸாமா இருப்பிடத்தை மாற்ற வேண்டியேற்பட்டது. இவ்வாறு இஸ் லாமாபாத் வந்த வேளையிலேயே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒஸாமாவின் பிரேதம் கடலில் அடக்கம் செய்யப்பட்ட தாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் தொலைக்காட்சியொன்று ஒஸாமாவின் சடலம் இதுவல்லவென மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது. ஒஸாமாவின் அடக்கஸ்தலம் தெரிந்தால் அல் கைதா போராளிகள் உஷாரடையலாம் என எண்ணியே கடலில் அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக