18 மே, 2011

டி எம் வி பி தலைவர் பிரதீப் மாஸ்டர் கைது






பிரதீப் மாஸ்டர்
இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு நகரிலுள்ள கட்சித் தலைமையகத்தில் வைத்து திங்கட் கிழமை மாலை கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்ட இவர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கைது செய்யபப்டுவதற்கு முதல் நாள் இவரது உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அக் கட்சி கூறுகின்றது.

தமது கட்சி மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பற்றி கட்சிக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை என அக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறுகின்றார்.

இருப்பினும் மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் அண்மையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகரொருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காவல் துறை விசாரணைகளின் தொடராகவே சந்தேகத்தின் பேரில் இக் கைது இடம் பெற்றுள்ளதாக காவல்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக