18 மே, 2011

பிலிப்பைன்ஸ் செல்லும் இலங்கையருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் விசா இருதரப்பும் இணக்கப்பாடு





பிலிப்பைன்சுக்கு செல்லும் இலங்கையர் களுக்கு விமான நிலையத்திலேயே நுழைவு விசா (ஞடூ அஙுஙுடுசுஹங் யடுஙூஹ) வழங்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிலிப்பைன்சுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டி ருந்த பிரதமர் டி. எம். ஜயரட்னவிற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி பெனிங்னோ அகினோவிற்குமி டையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டு ள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிப்பது, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தல், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கையர்கள் பிலிப்பைன்சுக்கு செல்லும் போது விமான நிலையத்திலேயே அவர்களுக்கான நுழைவு விசாவை வழங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்போது பிலிப்பைன்ஸ் ஜனாதி பதியை இலங்கைக்கு அழைக்கும் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வ அழைப்பினையும் பிரதமர் டி. எம். ஜயரத்ன அவரிடம் கையளித்துள்ளார்.

இவ்வழைப்பினை அவர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் அலு வலகம் தெரிவித்தது. இதன்போது கருத் துத் தெரிவித்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற பயங்கரவாத சூழல் முடிவுக் குக் கொண்டு வரப்பட்டு ஒரு சிறந்த நீண்ட பயணத்திற் கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

வேகமான அபிவிருத் தியை இலக்காகக் கொண்டுள்ள இத் தருணத்தில் சகல துறை செயற்பாடுகளிலும் இலங்கையுடன் நட்புறவுடன் செயற்பட வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில், பிலிப்பைன்ஸின் பிரதிப் பிரதமர் ஜெஜோமா பினாய் உட்பட அந்நாட்டின் முக்கிய உயரதிகாரிகளும் இலங்கையின் சார்பில் பிரதமரின் செய லாளர் எஸ். அமரசேகர, பிலிப்பைன்ஸிலுள்ள இலங்கைக்கான தூதுவர் நால்லகே பெனட் குரே உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக