18 மே, 2011

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது

போலி நாணயத்தாள்கள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கெக்கிராவை பகுதியிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று முன்தினமிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 2000 ரூபா நாணயத்தாள் ஒன்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மூன்றும் வைத்திருந்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக