18 மே, 2011

கனடாவுக்கு செல்லவிருந்த கப்பலில் விடுதலைப் புலிகளின் பிரசாரப் பொருட்கள்

விடுதலைப் புலிகளின் பிரசாரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய பெருந்தொகையான பதாகைகள் மற்றும் புத்தகங்கள் கொழும்புத் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து கனடா நோக்கிச் சென்ற கப்பல் கொழும்புத்துறை முகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் சந்தேகத்தின் பேரில் அதன் சரக்குப் பெட்டியை சோதனையிட்ட போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று சுங்கத்திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பதாதைகள் மற்றும் பிரச்சார விளம்பரங்கள் ஆகியன இந்தச் சரக்குப் பெட்டியிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கனடா முகவரியிடப்பட்ட விடுதலைப்புலிகளின் பிரசாரத்துக்கு உதவக்கூடிய புத்தகங்கள் 45 பெட்டிகளுக்குள் பொதியிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக