18 மே, 2011

13வது திருத்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் இந்தியாவிடம் இலங்கை உறுதி





இலங்கையின் அரசியலமைப் பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவ தற்கான சாதகமான சூழலை உருவாக்க முடியுமென இலங்கை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது.


“ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெற இலங்கை ஒத்துழைக்கும்"

இதேவேளை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியாவிற்கு நிரந்தர அங்கத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும், இலங்கை இந்தியாவிற்கு உறுதியளித்து ள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையிலான உயர்மட்டக்குழு இந்தியா சென்றுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு டில்லி சென்றிருந்த இந்தக் குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

மேற்படி சந்திப்புக்களையடுத்து இலங்கையும் இந்தியாவும் கூட்டறிக் கையொன்றை நேற்று விடுத்தது.

அந்தக் கூட்டறிக்கையின் விபரம் வருமாறு:

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இம்மாதம் 15 திகதி முதல் 17ம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தை மேற் கொண்டிருந்தனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தமது இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் சிவசங்கர் மேனன், வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இருதேச வெளிவிவகார அமைச்சர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் 16ம் திகதியன்று உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்திய போது, இரு தரப்பினரும் பரஸ்பர நல்லுறவு பற்றிய சகல விட யங்களையும் விரிவான அடிப்படையில் ஆராய்ந்தார்கள். 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத் திற்கு பின்னர் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தார்கள். 2010ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட கூட்டு ஆணைக்குழு கூட்டம் பற்றிய விபரங்களையும் அங்கு ஆராய்ந்தனர்.

இரு தேசங்களுக்கும் பொதுவான பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்தும் அங்கு ஆராயப்பட்டன. இலங்கையில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில் பல விடயங்களை புரிந்துணர்வுடனும், பரஸ்பர விட்டுக்கொடுக்கும் மனப் பான்மையுடனும், உண்மையான தேசிய இணக்கப்பாட்டை ஏற்படுத் துவதற்கான அரசியல் தூரதரிசனத்தை கையாள்வதற்கான அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கை வெளி விவகார அமைச்சர் இலங்கை அரசாங் கத்திற்கும் தமிழ் கட்சிகளுக்குமிடையில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரை யாடல்களை கூடிய விரைவில் வலுவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமது அரசாங்கம் திடமாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

இலங்கை அரசியல் சாசனத்திற்காக 13வது திருத்தத்தை அடிதளமாக அமைத்து, அதிகார பரவலாக்கலை நடை முறைப்படுத்துவதன் மூலம் இணக்கப் பாட்டை ஏற்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியுமென்றும் இலங்கைத் தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மீள்குடியேற்றம், இணக்கப்பாடு ஆகிய வற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில், தொடர்ந்தும் தனது கவனத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறதென்று கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (ககதஇ) வுக்கு ஏற்புடைய வகையில் பல் அமைப்பு ஆலோசனைக்குழு (ஐஐஅஇ) வுக்கு சட்டமா அதிபர் தலைவர் என்ற முறையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (ககதஇ) வின் இடைக்கால சிபா ரிசுகளை தடுத்து வைத்திருத்தல், சட் டம், ஒழுங்கு, நிர்வாகம், மொழிப் பிரச்சினை, சமூக, பொருளாதார, வாழ் வாதாரப் பிரச்சினை தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை அரசாங்கம் இத்திட்டங்களை கால தாமதமின்றி நடைமுறைப்படுத்தி மீள் குடியேற்றத்தை யும் உண்மையான நல்லிணக்கப்பாட்டை யும் ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கு வகை செய்வது டன் அவசரகால சட்டவிதிகளை கூடிய விரைவில் வாபஸ் பெற்று, மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்தி சகஜ நிலையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்திய அரசாங்கம் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடிய விரைவில் நிவாரணத்தையும், மீள்குடியேற்றத்திற்கான வசதியையும் செய்து கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் தரைக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கும் வாழ்வாதாரத்திற்கு உறுதுணை புரிவதற்கும் மேற்கொண்டு வரும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைப் பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட் டங்களை மேற்கொள்வதிலும் இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிற தென்றும், இத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், பலாலி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைகளில் திருத்த வேலைகளை செய்வதற்கும் கட்டடங்களை நிர்மாணிப் பதற்கும், தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும், யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையமென்றை நிர்மாணிப்பதற் கும், ரயில் சேவையை மீண்டும் ஆரம் பிப்பதற்கும், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனர்நிர்மாணம் செய்வதற்கும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் நல்ல நிலையில் இருப்ப தற்கும் நன்றி தெரிவித்தனர்.

இலங்கையில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் பலதரப்பட்ட ரயில் வேலைத் திட்டங்களில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தத் திட்டங்களை நேர காலத்தில் பூர்த்தி செய்வதற்கும் தாங்கள் வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

2010ம் ஆண்டு ஜூன் 9ம் திகதியன்று விடுக்கப்பட்ட கூட்டு பிரகடனத்திற்கு அமைய இரு தரப்பினரும் என்.டி.பி.சி மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் இடையிலான கூட்டு அனல் மின்சார திட்டத்தை திருகோணமலையின் சம் பூரில் பூர்த்தி செய்வதற்கும், அதனையடுத்து ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள பலாலி காங்கேசன்துறை ரயில் பாதையை மீள் நிர்மாணம் செய்தல், புதிய சமி க்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கும், முழுமையான பொருளா தார பங்காளி ஒப்பந்தத்தை (விரிஜிதி) கூடிய விரைவில் தயாரித்து முடிப்பதற்கும் இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.

இந்திய, இலங்கை மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்துவது பற்றிய பகுப்பாய்வு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்து வதற்கும் இணக்கம் தெரிவித்தனர். பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதிலும் இலங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கப் பாட்டை தெரிவித்தனர்.

2011ம் ஆண்டு மார்ச் 28,29ம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற கடற்றொழில் பற்றிய கூட்டு செயற்குழு கூட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் அங்கு ஆரா யப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்து வதை விட கடற்றொழிலாளர்களை மனிதாபிமான முறையில் நடத்துவது அவசியம் என்ற கருத்தை இரு தரப் பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தியத் தரப்பினர் இலங்கை கடல் எல்லைப் பிரதேசத்தில் இந்திய கடற்றொழிலாளர் களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப் பதாக அங்கு சுட்டிக்காட்டினார்கள். இது குறித்து இந்திய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் 2008ம் ஆண்டு ஒக் டோபர் 26ம் திகதியன்று கடற்றொழில் ஒழுங்கு முறைகள் பற்றிய கூட்டு அறிக்கையைடுத்து இப்போது இந்த வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதை ஏற்றுள்ளனர். இலங்கைக்கும் இந்தியா விற்கும் இடையில் கடற்றொழில் துறையில் அபிவிருத்தி மற்றும் ஒத்துழை ப்பு பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதற் கான நகல் ஒப்பந்தத்தை கூடிய விரை வில் பூர்த்தி செய்வதன் அவசியத்தை இரு தரப்பினரும் அங்கு வலியுறுத் தினார்கள்.

இரு தரப்பினரும் மக்களிடையே கலாசார நட்புறவையும் ஒருவர் ஒருவரு டனான தொடர்புகளை வளர்த்து, நட் புறவை பேணிப்பாதுகாப்பதற்கு உதவக் கூடிய வகையில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும், இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்குமிடையிலான பிரயாணிகளுக்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் அவசியத்தை வலியுறுத் தினர். இலங்கையிலுள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் இலங்கை யின் துறைமுக சேவைகளை விருத்தி செய்தல் தொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் முதலீடு செய்வதற்கும் இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.

இலங்கையும், இந்தியாவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் செயற்பாடு களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளனர்.

ஐ.நா. சபையின் நிரந்தர உறுப்பினர் களுக்கான அங்கத்துவ நாடுகளுக்கான எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியா விற்கு உரித்தான ஒரு அங்கத்துவத்தை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை தனது வலுவான ஆதரவை அளிக்கு மென்று அங்கு உறுதியளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக