18 பிப்ரவரி, 2011

மீனவர் விவகாரம் தொடர்பில் இந்தியா இலங்கையை அச்சுறுத்த முற்படுகிறது


மீனவர்களின் விவகாரத்தைக் காரணம் காட்டி இந்தியா இலங்கையை அச்சுறுத்துவதற்கோ இறைமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவதற்கோ முற்படக் கூடாது. அதற்கு அருகதையும் கிடையாது என்பதுடன் அனுமதிக்கவும் முடியாது என்று ஜே. வி. பி. தெரிவித்துள்ளது.

அப்பாவி மீனவர்களைப் பலிக்கடாக்களாக்கி தமிழகத்தின் தி. மு. க. தேர்தல் இலாபம் ஈட்டுவதற்கு முயற்சிக்கின்றது. தி. மு. க. வே தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்பரப்புக்குள் அனுப்பி பிரச்சினைகளை உண்டு பண்ணியுள்ளது. இவ்வாறான கீழ்மட்ட செயற்பாடுகளைக் கைவிடுமாறு தி. மு. க. தலைவர்களை எச்சரிப்பதுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அரசும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

ஜே. வி. பி.யின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக