18 பிப்ரவரி, 2011

இலங்கை - இந்திய மீனவர் விவகாரம்: நேரடி பேச்சுக்கு வருமாறு கனிமொழிக்கு அழைப்பு






இலங்கை- இந்திய கடல் எல்லைகள் மீறப்படுதல் மற்றும் கடற்றொழிலாளர் கைது செய்யப் படுதல் தொடர்பாக நேரடியாக பேச்சு நடத்துவதற்கு இலங்கை வருமாறு இந்திய நாடாளு மன்ற உறுப்பினர் கனி மொழிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அழைப்பு விடுத்தார்.


யாழ். சிறையில் உள்ள தமிழக மீனவர் வள்ளங்களை
சுத்தம் செய்வதற்கு அனுமதி

இலங்கை கடல் எல்லையைக் கடந்து யாழ். குடாக் கடலில் தமிழக மீனவர்கள் கடற்றொழிலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது குறித்தும் தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் மீன் வளம் சூரையாடப்படுவது குறித்தும் இருநா டுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டி ருந்த நிலையிலேயே கடந்த 15 ஆம் திகதி 112 தமிழக கடற்றொழிலாளர்கள் யாழ். மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இதேவேளை தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுவதாக இந்திய தரப்பில் எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை வந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையிலுள்ள கடற்றொழில் சங்கத்தினருக்கும் தமிழக கடற்றொழிலாளர் சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கை- இந்திய தரப்பி னருடன் பேச்சுக்களை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையி லேயே 112 தமிழக கடற்றொழிலாளர்க ளும், அதன் பின்னர் 24 கடற்றொழிலாளர்க ளும் யாழ். மீனவர் களால் சிறைபிடிக்கப்ப ட்டனர்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்குடனும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழக, கடற்றொழிலாளர்களை சட்டபூர்வமாக விடுதலை செய்வதை துரிதப்படுத்துவதற்கும் பேச்சுவார்த்தைகளை நடத்த கலைஞர் கருணாநிதியின் புதல்வியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை இலங்கைக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்தார்.


சென்னையில் பா.ஜ.க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்:
200பேர் கைது

தமிழகத்திலுள்ள கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளையும் உடன் அழைத்து வருமாறும் அமைச்சர் டக்ளஸ், கனி மொழிக்கு தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பு தொடர்பாக தமிழக அரசுடன் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாகவும் கனிமொழி தெரிவித்ததாக அமைச்சர் டக்ளஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கலைஞரின் புதல்வியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர் சென்னையிலு ள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கையில் கடற்படையினரே கைது செய்ததாகக் கூறியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவத்தின் போது கனிமொழி உட்பட 1000 பேர் பொலிஸாரி னால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடு தலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். மாதகல் கடலில் ஊடுறுவிய
26 இந்திய மீனவர்கள் நீதிமன்றில் ஆஜர்


யாழ். மாதகல் கடற்பரப்பில் மீண்டும் இலங்கை மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட 26 தமிழக மீனவர்களும் இன்று காலை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த தமிழக மீனவர்கள், 112 பேர் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை மீனவர்களால் கரைக்கு கொண்டு வரப்பட்ட மறுநாளே 26 தமிழக மீனவர்களும் மாதகல் பகுதிக்குள் ஊடுருவினர்.

இதேவேளை, மாஜிஸ் திரேட்டின் உத்தரவின் பிரகாரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 112 தமிழக மீனவர்களும் ஏனைய சிறைக் கைதிகளோடல்லாது தனியாக ஒரே இடத்தில் இருக்கக் கூடியவாறு சிறப்பேற்பாடுகளுடன் தடுத்து வைக்குமாறும் நீதவான் சிறையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவர்களது 18 வள்ளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் திரும்பி தங்களது நாட்டுக்குச் செல்லும் வரை அவர்களது வள்ளங்களை பராமரித்தல் மற்றும் துப்பரவு வேலைகள் செய்வதற்காக சிறையிலிருந்து குறிப்பிட்ட சில மீனவ ர்களை வள்ளத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் சிறையதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே முதலில் கைது செய்யப் பட்ட 112 பேர் மற்றும் 26 தமிழக மீனவர்களையும் விரைவில் விடுதலை செய்து தமிழகத்துக்கு அனுப்புவதற்கான பேச்சுக்களும் நடைபெற்று வருகின்றன.

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி

இலங்கை கடற் படையினரை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்த தமிழக பாஜக தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் உட்பட 200 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 112 மீனவர்கள் இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் நேற்று காலை புதுக்கோட்டை கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த 24 மீனவர்களும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இச் செயலைக் கண்டித்தும், இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 112 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கை தூதுரகத்தை முற்றுகையிட முயற்சி செய்த தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக