18 பிப்ரவரி, 2011

கொலைக் குற்றச்சாட்டு இலங்கையருக்கு 7 வருட சிறை: கட்டார் நீதிமன்றம் தீர்ப்பு


தனது நாட்டை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்த இலங்கையர் ஒருவருக்கு டோகா நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

இறந்தவரின் குடும்பத்திற்கு 200,000 ரியால் நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் இவருக்கு கட்டளை பிறப்பித்துள்ளது.

வீட்டுப் பணிப் பெண்ணொருவர் மீது இருவரும் காதல் கொண்டதால் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் பலியாகியுள்ளார். கள்ள உறவில் ஈடுபட்டதற்காக பணிப் பெண்ணுக்கும் கொலை செய்தவருக்கும் 3 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சிறைவாசம் முடிந்ததும் இவர்கள் நாடு கடத்தப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக