18 பிப்ரவரி, 2011

புத்தகாயாவில் இலங்கை யாத்திரிகர் இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர் இருவர் பீகார் மாநிலத்திலுள்ள புத்தகாயா மலைச் சிகரங்களில் ஏறும் போது உயிரிழந்துள்ளனர். 60 வயதான விதானபதி ரணனாவதி கும்கேஷ்வரி குன்றில் ஏறும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மற்றொரு இலங்கையர் கிதுகுட் குன்றில் ஏறும் போது சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறந்துள்ளார்.

இருவரின் சடலங்களும் இந்திய மகாபோதி சமூக நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்திய மாவட்ட அதிகாரிகள் இது குறித்து இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

50 பேர் கொண்ட இலங்கையர் குழுவுடன் யாத்திரை மேற்கொண்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக