18 பிப்ரவரி, 2011

இடம்பெயர்ந்தோர் மீளக்குடியமர 19 பெருந்தோட்டங்கள் தெரிவு


மண்சரிவு காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இருப்பிடங்களை இழந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தவென 19 பெருந்தோட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தோட்டங்களில் மக்கள் மீளக்குடியமர்வதற்குப் பொருத்தமான பிரதேசங்களை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு சிபாரிசு செய்துள்ளது.

இச்சிபாரிசின் அடிப்படையில் இவ்விரு மாவட்டங்களிலும் மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான வேலைத் திட்டங்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ளவர்களைப் பாதுகாப்பான மாற்று இடங்களில் மீளக்குடியமர்த்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ள பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை துரிதப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நடவடிக்கை தொடர்பாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார கூறுகையில்: மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்தவென பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தித் தருமாறு பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர்கள் 19 பெருந்தோட்டங்களை எம்மிடம் வழங்கினர். பதுளை மாவட்டத்தில் 16 பெருந் தோட்டங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 3 பெருந்தோட்டங்களும் இவ்வாறு வழங்கப்பட்டன.

இத்தோட்டங்களில் இருப்பிடங்களை இழந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி அது தொடர்பான சிபாரிசுகளை மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கியுள்ளோம். எமது சிபாரிசுகளுக்கு அமைய மீள்குடியேற்றத்திற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான நடவடிக்கை ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் என்றார்.

மண்சரிவு காரணமாக பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 586 குடும் பங்களை சேர்ந்த 2292 பேர் இருப் பிடங்களை இழந்து 20 முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகா மைத்துவ நிலையப் பேச்சாளர் பிர தீப் கொடுப்பிலி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக