18 பிப்ரவரி, 2011

நுரைச்சோலையில் டெங்கு நோய்க்கு இளைஞன் மரணம்


கற்பிட்டி, நுரைச்சோலை, கற்பாலி முகாமைச் சேர்ந்த பரீத் முகம்மது பாஹிம் என்ற 26 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் நேற்று மரணமானார்.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவர் மூன்று தினங்களாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இவரது நிலை மிக மோசமாக காணப்பட்டதால் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

குருநாகல் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இவர் உயரிழந்தார். இவர் கொழும்பு கிராண்ட்பாஸ் தைக்கா பள்ளிவாசலில் பேஷ் இமாமாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக