18 பிப்ரவரி, 2011

வடக்கு மக்களின் ஜனநாயகப் போராட்டத்துக்கு தலைமை தாங்குவதற்கு ஐ.தே.க. தயார்


அதிகாரங்களையும் சம உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும் வடக்கு மக்களின் ஜனநாயக போராட்டத்துக்கு ஐ.தே.க. தலைமை தாங்கும். யுத்தத்தின் பின்னர் நூறு வீதமான சுதந்திரமோ சமாதானமோ வடக்கு மக்களுக்கு கிட்டவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழும் சூழலை வெகு விரைவில் ஐ.தே.க. வின் அரசாங்கம் அமைத்துக் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐ.தே.க. வின் யாழ். மாவட்ட எம்.பி. விஜயகலா மகேஸ்வரனின் காரைநகர் இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக