18 பிப்ரவரி, 2011

இலங்கை தேசியக் கொடி எரித்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது



இலங்கையின் தேசியக் கொடியை எரித்த குற்றச்சாட்டில் 25 பேரை பொலிஸார் கைது செய்தனர்.இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து, மதுரையில் இந்திய இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது மீனவர்களை மீட்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் இலங்கையின் தேசியக் கொடியையும் எரித்தனர்.

இந்நிலையில் இலங்கையின் தேசிய கொடியை எரித்ததற்காக போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீதும் மதுரை திடீர் நகர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக