10 பிப்ரவரி, 2011

விலை நிர்ணயத்தை மீறும் வர்த்தகர்கள் கைது செய்யப்படுவர




நாடு, சிவப்பரிசி, வெள்ளை அரிசிகளை ஒரு கிலோ 60 ரூபாவிற்கும் சம்பா 70 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு நாடெங்கிலும் அரசாங்கத்தினால் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு ள்ளது.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக கூட்டுறவு மற்றும் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னண்டோ நேற்றுத் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் அரிசியின் விலையை வேண்டுமென்றே அதிகரித்து விற்பனை செய்வதாக அமைச் சுக்கு கிடைத்த தகவலின் அடிப் படையிலேயே இத்தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருகின்ற வேளையில், வேண்டுமென்றே இவ்வாறு அரிசியின் விலையை அதிகரிப்புச் செய்து விற்பனை செய்யும் வர்த்தக எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக