10 பிப்ரவரி, 2011

கப்பலினால் கனடா அரசுக்கு 25 மில்லியன் டொலர் செலவு

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய கரைக்கு அகதிகளை கொண்டு வந்த கப்பலினால் கனடியர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் 492 இலங்கைத் தமிழ் அகதிகள் வந்திருந்தனர். இவர்கள் தமக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோருகின்றனர்.

இவர்களை விசாரிப்பதற்காக மாத்திரம் 908,000 அமெரிக்க டொலர் செலவானதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு சட்ட ஆலோசனைக்கு 2 மில்லியன் டொலர் செலவாகியது. சமஷ்டி அரசாங்கம் மருத்துவ கவனிப்புக்காக செலவு செய்தது. இவை முதலில் கூறிய 25 மில்லியனுள் அடங்காதவை.

கனேடிய மத்திய அரசு இவ்வாறு தொகையான அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக கொண்டு வரவுள்ள சட்டத்தை எதிர்க்கட்சிகள் மனிதாபிமானமற்றவையென்றும் அரசியலமைப்புக்கு முரணான தெனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக