4 ஜனவரி, 2011

கித்துள் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை



கித்துள் உற்பத்திப் பொருட்களை ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி. சிவஞானசோதி தெரிவித்தார்.

கித்துள் உற்பத்திப் பொருட்களுக்கென அமெரிக்காவிலிருந்து கேள்விப் பத்திரம் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெரு முயற்சியின் பயனாக கித்துள் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அவற்றை சந்தைப்படுத்துவதற்கு இப்போது வெற்றிகரமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

கித்துள் மரத்தில் இருந்து பெறப்படும் கித்துள் பாணி, கருப்பட்டி ஆகியவற்றுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு இருப் பதனால் இதன் மூலம் பெருமளவு அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் கித்துள் பாணியையும், கருப்பட்டியையும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பாதிப்பு ஏற்படாது என வைத்தியர்கள் தெரிவிக் கின்றனர்.

கித்துள் மாவை பயன்படுத்தி இடியப்பம், பிட்டு போன்ற உணவைத் தயாரிப்பதற்கு உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்ட வர்களும் இப்போது பெரிதும் விருப்பம் காட்டி வருகின்றனர்.

கித்துள் மரத் தயாரிப்புகள் இயற்கையான இனிப்புத் தன்மை இருக்கின்றதனால் அது உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு இழைக்காது என்று கூறப்படுகின்றது.

கித்துள் மரத்திலிருந்து நல்ல சுவையான கள்ளையும் பெறக் கூடியதாக இருக்கிறது. இவற்றை பழுதடையாமல் பதனிட்டு போத்தலில் அடைத்தும் சந்தைக்கு அறிமுகப்படுத்த சிறந்த வாய்ப்பும் இருக்கின்றது.

இந்த உற்பத்தி பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும்.

இலங்கையில் சுமார் 300,000 கித்துள் மரங்கள் இருந்த போதும், அவற்றில் 90,000 மரங்களில் இருந்தே கித்துள் பாணி, கருப்பட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள கித்துள் மரங்களில் 85 சதவீதமான மரங்கள் வர்த்தக ரீதியில் பயன்படாதிருப்பதனால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் அமைச்சு கெஸ்பர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கித்துள் மரத்தின் உற்பத்தியை அதிகரிப் பதற்கான நடவடிக்கைகளை இப்போது மேற்கொண்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக