4 ஜனவரி, 2011

அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணியில் நாமும் பங்காளிகளாக வேண்டும் லேக்ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார


2011 ஆம் ஆண்டை அபிவிருத்திக்கான வருடமாக ஜனாதிபதி அறிவித்துள்ளதால் நாமும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் முழுமையான பங்காளர்களாக மாறவேண்டும் என லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பந்துல பத்மகுமார நேற்று கூறினார்.

2011 ஆம் ஆண்டின் பாரிய இலக்குகளை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்கு லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

லேக்ஹவுஸ் நிறுவன 2011 புத்தாண்டு வைபவம் நிறுவன தலைவர் பந்துல பத்மகுமாரவின் தலைமையில் லேக்ஹவுஸில் நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆசிரியர்பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், நடவடிக்கைப் பிரிவுப் பணிப்பாளர் உபுல் திசாநாயக்க, சட்டப்பிரிவுப் பணிப் பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர, பொது முகாமையாளர் அபய அமரதாஸ, பிரதம நிர்வாக அதிகாரி ரோஹன ஆரிய ரட்ன, முகாமையாளர்கள், பத்திரிகை ஆசி ரியர்கள், நிறுவன உயரதிகாரிகள், உட்பட பெருந்திரளான ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய தலை வர் பந்துல பத்மகுமார, 2011 ஆம் ஆண்டை அபிவிருத்திக்கான வருடமாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாமும் அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்காளிகளாக வேண்டும். பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கவும், அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு முக்கிய பங் களிப்பு வழங்கவும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.

நிறுவன அபிவிருத்தி தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கு எதுவித எதிர்பார்ப்பும் இருக்க வில்லை. ஆனால் இப்போது ஊழியர்கள் பழைய சம்பிரதாயங்களை விட்டும் ஒதுங்கி நாம் ஆரம்பித்த சகல நற்பணி களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக லேக்ஹவுஸ் நிறுவனம் சென்ற பாதை மாறி நல்ல பாதைக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது.

அந்த அடித்தளத்தின் படி 2011 இல் முன்னோக்கி செல்வதற்கு தயாராகியுள்ளோம்.

கடந்த காலத்தில் யுத்தம் முன்னெடுக்கப் பட்ட போது அரசாங்கத்தின் ஒரே ஒரு அச்சு ஊடகமான லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பாடல் பணிகளை முன்னெடுத்தது.

எமது நிறுவனத்தினால் வெளியிடப்படும் பிரதான பத்திரிகைகளுடன் புதிதாக இலவச வெளியீடுகளை வெளியிடவும் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றோம். புதிதாக தமிழ் சஞ்சிகையொன்றையும் ஆரம்பித்துள்ளோம். அதற்கு வடக்கில் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேநேரம் புதிய அச்சு இயந்திர மொன்றை கொள்வனவு செய்வதே எமது பிரதான இலக்காகும். வணிகப்பிரிவு இயந்திரத்தை மேலும் முன்னேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு அமைச்சரவை அனுமதி இருவாரங்களில் கிடைக்கும். வணிக பிரிவின் வருடாந்த வருமானத்தை 500 மில்லியனாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

நான் தலைவர் பதவியை ஏற்ற பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பிலும் அதன் ஊழியர்கள் தொடர்பிலும் உள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

95 வீதமான லேக்ஹவுஸ் ஊழியர்கள் நிறுவனத்தை நேசிக்கின்றனர். தாம் பெறும் சம்பளத்திற்கு சிறந்த சேவையாற்று கின்றனர்.

2011 ஆம் ஆண்டுக்குரிய பாரிய இலக் குகளை எட்டுவோம். போனஸை அதி கரிக்கவோ, கொடுப்பனவுகளை அதிகரிக் கவோ மாத்திரமல்லாமல் நிறுவனத்தின் எதிர்கால மேம்பாட்டுக்காக அனைவரும் பாடுபடுவோம். லேக்ஹவுஸ் எனும் தேசிய சொத்தை பாதுகாக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக