4 ஜனவரி, 2011

யுத்தத்தின் போது காயமடைந்தவர்களில் 4,209 பேர் அழைத்துவரப்பட்டனர்: ஆணைக்குழு முன் டாக்டர் சாட்சியம்

யுத்தத்தின்போது காயமடைந்த 3,021 பேர் கப்பல்களில் புல்மோட்டை ஊடாக பதவியா வைத்தியசாலையை வந்தடைந்தனர். அவர்களுடன் உதவியாளர்களாக 3,660 பேரும் வந்திருந்தனர். மேலும் தரை மார்க்கமாகவும் 1,188 நோயாளர்கள் வந்திருந்தனர். நோயாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்வீச்சுக்களிலேயே காயமடைந்திருந்தனர். பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாங்கள் அவர்களுக்கு அக்காலத்தில் சிகிச்சையளித்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா வைத்தியசாலையில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் மஹிந்த உயன்கொட தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக