4 ஜனவரி, 2011

முட்டுக்கட்டைகளை ஜனாதிபதி நீக்கியதனாலேயே நாளை பற்றி நாம் நம்பிக்கை கொள்ள முடிகிறது

எமது எதிர்கால அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருந்த அனைத்து தடைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீக்கியதன் காரணமாகவே நாம் நாளை பற்றி பேசவும் எதிர்காலம் பற்றி நம்பிக்கை கொள்ளவும் முடிகிறது என்று ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று கூறினார்.

புது வருடத்தில் வேலையை ஆரம்பிக்கும் நல்லநேரத்தை முன்னிட்டு ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக் காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சு ஊழியர்களிடையே தொடர்ந்து பேசிய அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது :-

மேற்குலக நாடுகள் பல நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் சீனா மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளுடன் இலங்கையும் ஆசியாவின் புதுமை மிக்க நாடாக மாறும் இலக்கை அடைய நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கு எமது அர்ப்பணிப்பு அத்தியாவசியமான ஒன்றாகும்.

முன்னைய அரசாங்கத்தில் உலக வங்கி, சர்வதேச நாணய சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒரு சுமையாகக் கருதப்பட்டனர். அவர்கள் கட்டாய லீவில் அனுப்பப் பட்டதுடன் புதிதாக ஊழியர்களை சேர்ப் பதும் குறைத்துக் கொள்ளப்பட்டது.

எனினும் ஜனாதிபதி அவர்களும் இந்த அரசாங்கமும் அதற்கு மாறாக அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான நம்பிக்கையை வைத்துள்ளதுடன் அரசாங்க சேவையை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்துள்ளதுடன் பல சலுகைகளையும் வழங்கியுள்ளனர்.

தேர்தல்கள் ஜனநாயக சமூகமொன்றில் மக்கள் அபிப்பிராயத்தை அளக்கும் முறையாக கருதப்படுகிறது. ஜனநாயக சமூகமொன்றில் பெரும்பாலானோரின் கருத்துக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு வரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

இந்த அபிவிருத்தி யுகத்தில் அரசாங்க ஊழியர்கள் நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்புகள் உள்ளன. இலங்கையை ஆசியாவின் புதுமை நாடாக மாற்றும் நோக்கத்தை நடைமுறைப்படுத்த அர சாங்கத்துக்கு அவர்கள் உதவ வேண்டும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப் பிட்டார்.

அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகல அங்கு உரையாற்றுகையில் :

இலங்கையை ஆசியாவின் புதுமை நாடாக மாற்றும் நோக்கத்தை எட்டுவதற்கான அடிப்படையை அரசாங்கம், மொத்த உள்ளூர் உற்பத்தியை 8 சதவீதமாக அதிகரித் துள்ளதுடன் பணவீக்கத்தை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்ததன் மூலம் ஏற்படுத்தி யுள்ளது. அத்துடன் உலக வங்கி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களின் பாராட்டுக்கும் அரசாங்கம் உரித்தாகியுள்ளது என்று குறிப்பிட்டார். அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி கே. டபிள்யூ. டி. என். அமர துங்கவும் அங்கு உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக