4 ஜனவரி, 2011

வர்த்தக அமைச்சின் நேரடி கண்காணிப்பில் தம்புள்ளை பொருளாதார நிலையம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவப் பொறுப்புக்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேற்படி பொருளாதார மத்திய நிலை யத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ள ஊழல் மோசடிகளைத் தடுக்கும் வகையிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊழல் மோசடிகள் தொடர்பாக வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு விஜயம் செய்த அமைச்சர், அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். இதற்கிணங்க அதன் முகாமைத்துவப் பொறுப்புக்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சர் தீர்மானித் தார்.

வர்த்தகர்கள் மற்றும் பாவனையாளர் களின் நலன் கருதியே இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக