4 ஜனவரி, 2011

ஆயுதமுனையில் இளம் பெண்ணிடம் தாலிக்கொடி உட்பட நகைகள் திருட்டு: கிளிநொச்சியில் சம்பவம்

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது போல் வன்னியிலும்ஆயுதமுனையில் கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிளிநொச்சி நகருக்கு மிகச் சமீபமாகவுள்ள கனகபுரம் முதலாம் குறுக்குத் தெருவில் இரவு வேளை ஆயுதமுனையில் இளம் குடும்பப் பெண்ணின் தாலிக்கொடி உட்பட மேலும் பல நகைகள் கொள்ளையர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதேவேளை இத் தெருவிலுள்ள பலசரக்குக் கடை ஒன்றை இரவுவேளை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கள் பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கிளிநொச்சி கணேசபுரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் நகை, பணம், பொருட்கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வற்றாப்பளை, தண்ணிரூற்று, முள்ளியவளைப் பகுதிகளிலும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக