4 ஜனவரி, 2011

மனித நேயத்துடன் சேவை அரச ஊழியர்கள் புத்தாண்டு உறுதிமொழி



புத்தாண்டு பிறந்ததையடுத்து முதன் முதலில் அரச அலுவலகங்களில் பணிகளை நேற்று ஆரம்பித்த அரசாங்க ஊழியர்கள் ‘மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவோம்’ என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

புத்தாண்டில் முதற் பணிகளை ஆரம்பிக்கும் பிரதான நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நடைபெற்றதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஊழியர்க ளுக்கு வாழ்த்துக் கூறி அறிவுரைகளையும் வழங்கினார்.

புத்தாண்டில் அரச அலுவலகங்களில் முதற் பணிகளை ஆரம்பிக்கும் வைபவங்கள் அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் உட்பட மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மட்டங்களிலும் நேற்று இடம்பெற்றன. பாற்சோறு மற்றும் சிற்றுண்டி வகைகள் பகிரப்பட்டு மகிழ்ச்சியுடன் இச்செயற் பாடுகள் இடம்பெற்றன. நிறுவனத்தின் தலைவர்கள், பிரதானிகள் முன்னிலையில் ஊழியர்கள் மனித நேயத்துடன் மக்களுக்கு சேவை செய்வதாக உறுதிமொழியெடுத்துக் கொண்டனர்.

தமது பொறுப்புக்களை வினைத்திறமை யுடனும் திடசங்கற்பத்துடனும் பயன்மிக்கதாக நேர்மையாக அர்ப்பணிப்புடன் மக்களுக்கு வழங்குவதாக அவர்கள் உறுதிமொழி யெடுத்தனர்.

வருடாந்தம் இந்த உறுதி மொழி எடுத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனைத்து அரச திணைக்களங்களுக்கும் இம்முறையும் சுற்றுநிருபங்களை அனுப்பிவைத்திருந்தது.

நேற்றுக் காலை 8.55 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் தேசிய கொடியை மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் தேசிய கொடி யுடன் பொலிஸ் கொடியையும் ஏற்றி இரண்டு நிமிட மெளனம் அனுஷ்டிக் கப்பட்டது.

பாடசாலைகளும் முதலாம் தவணையின் பொருட்டு திறக்கப்பட்ட போது மாண வர்கள் மகிழ்ச்சியுடன் தமது ஆசிரியர் களுக்கும், நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட் டத்தில் உள்ள சகல அரசாங்க அலுவல கங்களிலும் உறுதிப்பாட்டு வைபவங்கள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸார், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன முன்னிலையில் உறுதிமொழி செய்து கடமைகளை ஆரம்பித்தனர்.

கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் விஜயவர்தன, மாவட் டத்தின் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக