4 ஜனவரி, 2011

தேங்காய் இறக்குமதி நிறுத்தம்

இந்திய கேரள மாநிலத்திலிருந்து தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்த போதிலும், அந்த இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நாட்டில் நிலவிய தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் வகையிலும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலுமேயே தேங்காயை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீரமானித்திருந்தது.

இந்நிலையில், தாவர உற்பத்திச் சட்டத்தின் பிரகாரம் தேங்காயை இறக்குமதி செய்யமுடியாது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியதை அடுத்தே இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தின் பிரகாரம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள தெங்கு ஆராய்ச்சி சபை, விவசாயத் திணைக்களப் பணிப்பாளரின் பரிந்துரைக்கு அமைவாக பொருட்களை இறக்குமதி செய்யாலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக