3 ஜனவரி, 2011

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை சபையில்; பிரதமர் தெரிவிப்பு






உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் நாளை (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.

மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பு நேற்று (2) காலை ஞாயிற்றுகிழமை இடம்பெற்றது.

பிரதமர் அங்கு தொடர்ந்து உரை யாற்றுகையில்:-

குறித்த திருத்தசட்டமூலம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கும் அவை தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்ட பிரதமர், முறையான தேர்தலொன்றை நடாத்துவதற்கான அனைத்து சிறந்த தீர்மானங்களையும் எதிர்க்கட்சியினர் முன்வைப்பார்கள் எனவும் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள் மார்ச் மாதம் நிறைவடைய வுள்ளன.

இருந்தபோதும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ளவாறு இடம்பெறும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக