3 ஜனவரி, 2011

கொழும்பு - பதுளை ரயில் சேவை வழமைக்குத் திரும்பின





மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட பதுளை - கொழும்பு ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பின.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டன. இதனால், சனிக்கிழமை “உடரட்ட மெனிக்கே" மற்றும் “பொடி மெனிக்கே" ஆகிய ரயில்களின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

எனினும், நேற்றுக் காலை முதல் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியதுடன், காலை உடரட்ட மெனிக்கே ரயில் பதுளை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக