3 ஜனவரி, 2011

‘மனித நேயத்துடன் மக்கள் சேவை’ அரசின் வேலைத் திட்டம் இன்று ஆரம்பம்; ஜனாதிபதி செயலகத்தில் பிரதான வைபவம்






புது வருடத்தில் அரச நிறுவனங்கள் மக்களுக்கான சேவையை ‘மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவோம்’ எனும் தொனிப் பொருளில் ஆற்ற வேண்டுமென பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சகல அமைச்சுக்களுக்கும், திணைக்களத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான வேலைத் திட்டம் தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட வேண்டுமெனவும் இவ்வேலைத்திட்டத்தின் பிரதான வைபவம் இன்று திங்கட்கிழமை 03ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் சகல அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படுவதுடன், நாட்டுக்காக உயித் தியாகம் செய்த படை வீரர்களுக்காக இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.

நிகழ்வின் இறுதியில் மனித நேயத்துடன் மக்களுக்கு சேவையாற்றுவது தொடர்பாக சகல அரசாங்க ஊழியர்களும் உறுதி மொழியொன்றை எடுத்துக்கொள்ள வேண்டுமென பொது நிருவாக அமைச்சின் செயலாளர் பி. பீ. அபயக்கோன் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக