3 ஜனவரி, 2011

தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பவற்றின் உபகுழு இவ்வாரம் கூடவுள்ளது-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்





தீர்வு தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஆகியன ஒன்றிணைந்து அமைத்திருக்கும் ஆறுபேர் கொண்ட உபகுழுவானது இந்தவாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்போது தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்;வினைத் தயாரிப்பது தொடர்பிலான ஆரம்பக்கட்டப் பணிகள் குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் அரசியல்குழுவே இவ்வாரம் நடுப்பகுதியில் கூடவுள்ளது என்றும் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக