3 ஜனவரி, 2011

இலங்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு


இலங்கையில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 1981ல் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின், 1991 மற்றும் 2001லும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்துக்கிடையிலான போர் காரணமாக மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் 18ல் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனால், இந்தாண்டில் முழுமையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்நாட்டு புள்ளியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக