14 ஜூன், 2010

சேகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று

இடது சாரிப் புரட்சித் தலைவர்களுள் ஒருவரான செகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்த இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார்.

பிடரல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட இவர், இடது சாரிக் கருத்துக்களால் கவரப்பட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயல்படுவதில் தீவிரம் காட்டியவராவார். இளைஞர்கள் மத்தியில் இவர் பெரிதும் போற்றப்பட்ட ஒருவர்.

இவர் இளைஞராக இருந்த காலத்தில் ஆர்ஜென்டினாவில் உதைப்பந்தாட்டம் மற்றும் றக்பி என்பவற்றில் பிரபலம் பெற்றிருந்தார்.

1971இல் இலங்கையில் ஏற்பட்ட இளைஞர் புரட்சியின் போது, இவரது பெயர் இலங்கையில் மிகப் பிரபலம் பெற்றிருந்தது.

புரட்சிக் கருத்துக்களை அல்லது ஏகாதிபத்திய எதிர்கருத்துக்களைக் கொண்டோர், அக்காலப் பகுதியில் இலங்கையில் 'சேகுவரா' என்று அழைக்கப்படும் அளவு இலங்கையில் இவரது பெயர் பிரபலம் பெற்றிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக