14 ஜூன், 2010

எலிக்காய்ச்சலால் நாட்டில் 2000 பேர் பாதிப்பு : 20 பேர் வரை பலி

இலங்கையில் சுமார் 2000 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 20 பேர் வரை மரணித்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அண்மையில் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளின் அருகிலேயே இது அதிகம் பரவி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக காலி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக எலியின் சிறு நீர் வயல்வெளிகளில் கலக்கும்போது, விவசாயிகளே இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர். விசேடமாக உடலில் காயங்கள் உள்ளவர்களுக்கு இது விரைவில் தொற்றுவதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக