14 ஜூன், 2010

மக்கள் விடுதலை முன்னணி தூதுக்குழு இன்று வன்னி விஜயம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த நிலையில் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவொன்று இன்று வன்னிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வா,அனுரகுமார திஸ்ஸாநாயக்க,விஜித்த ஹெரத்,சுனில் ஹந்துன்னெத்தி,அர்ஜூன ரணதுங்க,முன்னாள் எம்.பிக்களான இராமலிங்கம் சந்திரசேகரன்,லால்காந்த, ஆகியோர் இக்குழுவில் அடங்கிகின்றனர்.

மூன்று நாட்களாக அமையவுள்ள இந்த விஜயத்தின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக