5 மார்ச், 2010

சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு குற்றச்சாட்டின் பேரில் தடுத்து







சட்ட
விரோத ஆயுதக் கொள்வனவு குற்றச்சாட்டின் பேரில் தடுத்து



வைக்கப்பட்டுள்ள ஹைகோர்ப் நிறுவனத்தின் பணிப்பாளர் வெல்லிங்டன் டியோட்டுக்கு பிணை மறுக்கப்பட்டு அவர் மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹைகோர்ப் நிறுவன பணிப்பாளரை ரகசிய பொலிஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பொது மக்கள் சொத்து சட்டத்தின் கீழேயே சந்தேக நபரை ரகசிய பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

எனவே அவரை பிணையில் விடுவதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறிய மேலதிக மாவட்ட நீதவான் லங்கா ஜயரட்ன சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதி மறுத்தார்.

விசாரணைகளை துரிதப்படுத்த ரகசிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதுடன் அது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை வங்கி முகாமையாளர்கள் இருவரும் விசாரணை நடத்துவோரிடம் வழங்கவேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். _

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக