6 டிசம்பர், 2010

போக்குவரத்துச் சபை ஊழியர்களது வருமானத்தை அதிகரிக்க திட்டம்: குமார வெல்கம

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களது வருமானத்தை அடுத்த வருடம் முதல் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

சேதமடைந்தநிலையில் இருந்து புதிப்பிக்கப்பட்ட 37 பஸ்களை தங்கல்லை பஸ் நிலையத்திற்கு கையளித்து உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

''இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்கு சொந்தமான 6 ஆயிரம் பஸ்கள் தற்போது இயங்கி வருகின்றன. புதிதாக மேலும் ஆயிரம் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
போக்குவரத்துச் சபைக்கு சிறந்த இலாபத்தை ஈட்டித் தரக்கூடியவகையில் ஊழியர்கள் செயற்படுவார்களாயின் அவர்களது வருமானத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக