6 டிசம்பர், 2010

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து

இலங்கைக்கான 3 நாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலஸ்டேயார் பர்ட்டின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கவிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளார் என டொமினிக் வில்லியம் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக