6 டிசம்பர், 2010

கார் - ஆட்டோ மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஸ்தலத்தில் பலி


கல்எலியவிலிருந்து பஸ்யால நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள் ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை 8.15 அளவில் பஸ்யாலைக்கு அருகிலுள்ள மல்ஹேவ சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த மூன்று பெண்களும், மூன்று சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

கல்எலியவிலிருந்து பஸ்யால நோக்கி வந்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடனே பஸ்யாலவிலிருந்து கல்எலிய நோக்கி வேகமாக சென்ற கார் மோதியுள்ளது.

பஸ்யால பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சியாத் (33), ஒரு பிள்ளையின் தந்தையான ரம்லான் (28) ஆகிய இருவருமே இந்த விபத்தில் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் மூன்று பெண்கள் படுகாயமடைந்துள்ளதுடன், ஒன்பது மாத குழந்தையும், நான்கு மற்றும் ஏழு வயது சிறுவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நான்கு வயது சிறுவன் மேலதிக சிகிச் சைக்காக கொழும்பு லேடி றிச்வே வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக