6 டிசம்பர், 2010

தொலைபேசி உரையாடலை நிறுத்துமாறு தாய் புத்திமதி கூற மகள் தற்கொலை


தொலைபேசி உரையாடலை நிறுத்துமாறு தாய் கூறிய புத்திமதியை ஏற்க மறுத்து 21 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று அளவத்துகொடைப் பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த யுவதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் தாயார் சாட்சியத்தில் கூறியதாவது,

தனது மகள் தினந்தோறும் தொலைபேசி மூலம் தன் காதலனுடன் நீண்ட நேரம் உரையாடுவதால் தான் அதனைக் கண்டித்தேன். இதன் காரணமாக அவர் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இம்மரணம் சமபந்தமான பிரேத பரிசோதனையை கண்டி போதனா வைத்தியசாலையின் வைத்தி அதிகாரி ஏ.பீ. செனவிரத்ன நடாத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக