16 டிசம்பர், 2010

யாழில் பட்டப்பகலில் மூவர் மீது வாள்வெட்டு

யாழ். நகரின் மத்திய பகுதியில் இடம் பெற்ற கைகலப் பின்போது மூவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பஸ் நிலையப் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. யாழ் பஸ் நிலையப் பகுதியில் பிச்சையெடுத்துவரும் கணவனும் மனைவியும் மற்றும் மனைவியின் தாயாருக்கும் மேலும் சிலருக்குமிடையில் ஏற்பட்ட கருத்துமோதல்கள் முற்றி வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இச்சம்பவத்தை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின்போரில் அவரின் மனைவியையும் அவரின் கைக்குழந்தையையும் தாயாரையும் கைதுசெய்தனர். மேலும் இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக