16 டிசம்பர், 2010



நேபாளத்தில் விமான விபத்து: 22 பேர் பலி
நேபாளத்தில் நேற்று இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தொன்றில் அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சிறிய ரக பயணிகள் விமானமான 'டாரா எயார் டி.எச்.சி- 6 டுவின் ஒட்டர்' கிழக்கு நேபாள கிராமமான லமிடண்டாவிலிருந்து காத்மண்டுவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது மலைப்பாங்கான இடமொன்றில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று காணமல் போன இவ்விமானத்தைக் கண்டறிய பாரிய தேடுதல்கள் நடைபெற்றன.

இந்நிலையிலேயே இன்றுகாலை காத்மண்டுவிற்கு சுமார் 150 கிலோமீற்றர் தொலைவில் விபத்துக்குள்ளான இவ்விமானத்தினை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

19 பயணிகளுடனும் 3 விமானப்பணியாளர்களுடம் இவ்விமானம் பயணித்துள்ளது. இதில் ஒருவர் அமெரிக்கர் என்பதுடன் மற்றையவர்கள் நேபாளிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் இந்து யாத்திரிகர்கள் எனவும் இவர்கள் தங்களது புனித யாத்திரையின் பின்னர் திரும்பியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக