16 டிசம்பர், 2010

தீவிரவாதத்துக்கான ஆதரவை இங்கிலாந்து அரசு இல்லாதொழிக்க வேண்டும்: ஜனசெத பெரமுன

இங்கிலாந்து அரசாங்கம் தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி தீவிரவாத்தை ஒழிக்க வேண்டும் என ஜனசெத பெரமுன தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்கு எதிராக இன்று காலை 10 மணியளவில் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஜனசெத பெரமுனவின் தலைவர் சோமனந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாட்டில் சமாதானம் நிலவுவதோடு, எமக்கு தேவையானவையும் உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிரவாதத்தை ஒழித்தது போன்று நாட்டில் தற்போது உள்ள பொருளாதார பிரச்சினையும் தீர்த்து நாட்டில் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் தீவிரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து, அதன் செயற்பாடுகளை இல்லாதொழிக்க வேண்டும். மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறான நிலை காணப்படுகின்றது. எனவே பயங்கரவாத்துக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக