16 டிசம்பர், 2010

பிரதமர் சிங், சிதம்பரம், கருணாநிதியை கொலை செய்ய புலிகள் திட்டம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் வரவிருந்த நிலையில், புலிகள் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியிரு ந்தனர் என தெரியவந்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதி வழியாக புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக தமிழக காவல்துறையும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பியிருந்ததாகவும் காவல்துறை மற்றும் உளவுத்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரதமர் மட்டுமல்லாது வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் புலிகளின் கண்காணிப்பு வலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு டிஜிபி லத்தீகா சரண்; “இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
முன்னெச்சரிக் கையுடன் இருக்கிறோம்" என்றார்.

“இப்படியான செய்திகள் வருகிறதோ இல்லையோ அதிமுக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பை நாம் எப்போதும் பலப்படுத்தியே வைத்துள்ளோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக