20 டிசம்பர், 2010

காத்தான்குடியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது







காத்தான்குடி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்;ளதுடன் அவரிடமிருந்த பெருமளவிலான கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றிரவு காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்தனவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் குழுவொன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவின் காங்கேயனோடை கிராமத்திலுள்ள ஒருவரின் வீட்டில் நடாத்திய சோதணை நடவடிக்கையில் ஒருகிலோ 535 கிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கைது செய்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக