20 டிசம்பர், 2010

இலங்கையிலிருந்து லண்டனுக்கான விமான சேவைகள் யாவும் ரத்து




மோசமான பனிப்பொழிவு காரணமாக லண்டன் ஹீத்துறூ விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஹீத்துறூ விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

பனிப்பொழிவு கட்டுப்பாட்டுக்குள் வந்து ஹீத்துறு விமான நிலையம் திறக்கப்பட்டதும் விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து ஹீத்துறூ விமானநிலையம் பயணிக்கும் பயணிகள் தம்முடன் தொடர்பில் இருக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், 0197335555 அல்லது 0197332377 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தம்மைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

ஹீத்துறூ விமான நிலையம் திறக்கப்பட்டதும் பயணிகள் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் அதிகாரி ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக