20 டிசம்பர், 2010

அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டிலேயே செயற்பாடு சுமந்திரன் எம்.பி

அரசியல்தீர்வு மற்றும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்திற்குப் பூரண அனுசரணை வழங்குவதென்ற நிலைப்பாட்டின் அடிப்படை யிலேயே செயற்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். இது தொடர்பாகத் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர். இனப்பிரச் சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உடனடிப் பிரச் சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசாங் கத்திற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்க நாம் தீர்மானித்தோம்.

இதற்கமைய நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக நாம் வாக்களிக்காது விட்டோம். இவ் விரண்டு முக்கிய விடயங்களிலும் அரசாங்கம் எம் மையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இவ்விடயத்தில் அரசாங்கம் கொள்கை யளவில் இணங்கிக் கொண்டுள்ளபோதும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இந்த நிலையிலேயே நாம் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் உள்ள மக்களை நாம் சந்தித் துள்ளோம். கடந்த இரண்டு தினங்களாக மூதூர் பிரதேசத்தில் முகாம்களிலுள்ளவர்களை நாம் சந்தித்தோம்.

சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெய ர்ந்துள்ள இம்மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியேற வேண்டுமென்றே விரும்புகின்றனர். சம்பூரி லேயே நாம் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.

அதனைத் தவிர வேறு எந்த விடயத்திலும் எம்மைக் குடியமர்த்த வேண்டாம் என்று தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக