20 டிசம்பர், 2010

சீரான பாதையில் இலங்கை; பொருளாதாரத்தில் சாதனை மிகு வளர்ச்சி


கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை யின் பொருளாதாரம் தொடர்பாக உறுதி யான நோக்கு அல்லது நிலையான செயற்பாடு இல்லாதிருந்த போதிலும் தற்போது இலங்கையின் பொருளாதாரத்தை சீரான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு தொடர்பான பொருளாதார செயற்பாடுகள் தொடர் பாக கருத்துத் தெரி விக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக் களத் தினால் 2010 ஆம் ஆண்டில் மூன் றாவது காலாண்டு தொடர்பான புள்ளி விபர அறிக்கை வெளியிடப்பட்டது.

அதற்கேற்ப மூன்றாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8 சதவீதத்தினால் வளர்ச்சி யடைந்துள்ளது. இது இலங்கை ஒரு காலாண்டுப் பகுதியில் பெற்ற இரண்டாவது அதிகூடிய வளர்ச்சி வீதமாகும்.

இது தொடர்பாக மேலும் கருத்து கூறிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் குறிப்பிட்டதாவது,

கடந்த வருடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.5 சத வீதத்துக்கு கட்டுப்படுத்தப்பட்டி ருந்தது. எனினும் இந்த வருடம் முதல் காலாண்டுப் பகுதி யில் 7.6 சதவீதமும் இரண்டாவது காலா ண்டில் 8.5 சதவீதமும் மூன்றாவது காலாண் டில் 8 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அனைத்து காலா ண்டு பகுதிகளிலும் வளர்ச்சி மட்டம் நாம் வருடத்தின் ஆரம் பத்தில் மதிப்பிட்ட இலக்குக்கு மேலாக இருந்தது. வருட ஆரம்பத்தில் நாம் 6.5 சதவீத வளர்ச்சியை இந்த வருடம் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்தோம். எனி னும் இவ்வருடம் 8 சதவீதத்துக்கு கிட்டிய வளர்ச்சியை பெற முடியும் என தெரிகிறது.

இந்த வளர்ச்சி பொருளாதாரத்தின் ஒரு பிரிவுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. யுத்தத்துக்கு பின்னர் எமது பொருளாதார அபிவிருத்தி நாட்டின் அனைத்து பிரிவு களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விவசாய பிரிவு 6.2 சதவீதத்தாலும் கைத்தொழில் பிரிவு 8.8 சதவீதத்தாலும் சேவைகள் பிரிவு 8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

நாட்டின் வயற் காணிகள் முழுமையாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பிரதேசங்களிலும் புதிய கட்ட டங்கள் நிர்மாணிக்கப்படுவதை காண முடிகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி மட்டம் உயர்ந்துள்ளது.

முதலீடுகள் பாரிய வகையில் அதிகரித்து வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ் வருடத்தில் சரித்திரத்தில் இல்லாதவாறு அதிகரித்து வருகிறது. மஹிந்த சிந்தனையின் படி இலங்கையை ஆசியாவின் புதுமையாக மாற்றும் நோக்கத்தை எட்டும் அடிப்படை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் கடந்த காலத்தில் ஆரம்பித்த பல அபிவிருத்தித் திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்படும் நிலையில் உள்ளன. துறைமுகங்கள், விமான நிலையம், நீர்ப் பாசனம், மின்சாரம், பெருந்தெருக்கள் தொடர்பான பல திட்டங்கள் அடுத்த வரு டத்தில் முழுமைபெறும். அதேபோல் தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும் அதி கரித்து வருகின்றன. இவ்வாறான நிலை யில் 2011 இல் மிகவும் உயர்ந்த வளர்ச்சி மட்டத்தை எட்டமுடியும். அவ்வாறான நிலையை தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்க்கப் படுகிறது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக