4 டிசம்பர், 2010

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்


பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற பார்வையாளர் கலரியில் அமர்ந்துள்ள நிலையில் சபையில் சகல உறுப்பினர்களும் ஒழுக்கத்துடன் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்டதன் எதிரொலியாக நேற்றுமுன்தினம் சபைக்குள் ஏற்பட்ட அமளி துமளியின்போது பாடசாலை மாணவர்கள் பார்வை யாளர் கலரியில் அமர்ந்திருந்தனர்.

மாணவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் கூறியபோதும் அமளிதுமளி தொடர்ந்தும் ஏற்பட்டது.

இந்த நிலையிலேயே பாடசாலை மாண வர்கள் வெளியேற்றப்பட்டனர். இச்சம் பவத்தை உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியே சபாநாயகர் நேற்றுக் காலை மேற்கண்ட அறிவுறுத்தல்களை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக