4 டிசம்பர், 2010

யாழில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி

கொட்டும் மழையிலும் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஆயுத முனையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பதற்றமும் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

தெல்லிப்பளை அளவெட்டியில் நேற்றிரவு 8 மணியளவில் துப்பாக்கிகள் சகிதம் வந்த திருடர்கள் எட்டாம் கட்டை வீதியிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை திருடியுள்ளார்கள். பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் நகைகளும் களவாடப்பட்டுள்ளன.

இதேபோன்று அளவெட்டி பகுதியினூடாக இரவு வேளைகளில் பயணம் செய்வோர் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டு பணம் பறிக்கப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக